
தமிழகத்தில் குறிப்பாக சென்னை சுற்றுவட்டாரத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதால் வருகிற 19-ந்தேதி முதல் 30-ந் தேதிவரை 12 நாட்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம்(ஒரு பகுதி), திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து இந்த 4 மாவட்டங்களில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மீண்டும் தலா ரூ.1,000 வழங்கப்பட உள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
நிவாரணம் வழங்கப்படும் பகுதிகள்:
சென்னை மாநகராட்சி பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகள்
பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள்
செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ரூ.1,000 நிவாரணத் தொகையை அரசு வழங்கும்.
மேலும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் ரூ.1,000 நிவாரணமாக அரசு வழங்கும்.
இந்த உபயோகமான தகவலை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.